என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே தொழிலாளி வெட்டிக்கொலை: 5 பேர் கைது
Byமாலை மலர்11 July 2021 12:34 PM GMT (Updated: 11 July 2021 12:34 PM GMT)
தஞ்சை அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலியமங்கலம்:
தஞ்சையை அடு்த்த சாலியமங்கலம் அருகே உள்ள கொட்டைகொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(வயது35). இவரது தம்பி சின்னராஜா (30). இருவரும் தொழிலாளிகள். சம்பவத்தன்று சாலியமங்கலம் கீழத்தெரு சாலை பிரிவு பகுதியில் வந்த பிரபு, சின்னராஜா ஆகியோரை இடபிரச்சினை காரணமாக மர்மநபர்கள் வழிமறித்து கத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சின்னராஜா தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று இந்த கொலைவழக்கில் தொடர்புடைய கொட்டைகொல்லைமேடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (27), ஜெயராமன் (24), விக்னேஷ் (25), விவேக்குமார் (21), கணேசன் (56) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X