search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழி அடிக்கல் நாட்டினார்
    X
    கனிமொழி அடிக்கல் நாட்டினார்

    திருச்செந்தூர் அருகே பூச்சிக்காடு பள்ளியில் ரூ.21 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் - கனிமொழி அடிக்கல் நாட்டினார்

    திருச்செந்தூர் அருகே பூச்சிக்காடு இந்து தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் ரூ.21 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டுவதற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே பூச்சிகாடு இந்து தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கூடுதலாக புதிய வகுப்பறை கட்டுவதற்காக பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.21 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மாலையில் பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பள்ளி செயலாளர் சின்னத்துரை வரவேற்றார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் திருச்செந்தூர் மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆபேத்நேகா, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காத்தவராயன், பஞ்சாயத்து தலைவர்கள் திலகவதி (பள்ளிப்பத்து) மகாராஜன் (மேலத்திருச்செந்தூர்) தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவை தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் எஸ்.ஏ.செந்தில்குமார், கானம் நகர செயலாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×