என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கனரக வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவி-பொதுமக்கள் வலியுறுத்தல்
Byமாலை மலர்11 July 2021 8:31 AM GMT (Updated: 11 July 2021 8:31 AM GMT)
தொழில்களுக்காக இயக்கப்படும் கனரக வாகனங்கள், சாலை விதிமுறைகளுக்கு புறம்பாக அசுர வேகத்தில் செல்கின்றன.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு தொழில்களுக்காக இயக்கப்படும் கனரக வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து மடத்துக்குளம் தாலுகா பகுதி பொதுமக்கள் அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில், மடத்துக்குளம் பகுதியின் பல இடங்களில் தென்னை நார் தொழிற்சாலைகள், குவாரிகள், செங்கல்சூளைகள், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இது தவிர தேங்காயை மொத்தமாக குவித்து வைத்து மட்டையை உரித்து விற்பனைக்கு அனுப்பும் தொழிலும் நடக்கிறது.
இந்த தொழில்களுக்காக இயக்கப்படும் கனரக வாகனங்கள், சாலை விதிமுறைகளுக்கு புறம்பாக அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால் பல விபத்துக்கள் நடந்துள்ளன. இதற்கு தீர்வாக வணிக ரீதியாக இயக்கப்படும் கனரக வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த போலீசாரும் போக்குவரத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X