search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை கொள்ளை
    X
    நகை கொள்ளை

    சிங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை திருட்டு

    கோவை சிங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எஸ்.எச்.எஸ். காலனி கங்கா நகரை சேர்ந்தவர் சுசீந்திரன் (வயது 33). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வெளியூர் சென்றார்.

    பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கட்டிலுக்கு கீழ் இருந்த நகை பெட்டிக்குள் இருந்த 60 பவுன் நகையை காணவில்லை.

    இது குறித்து சுசீந்திரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதில், தனது நெருங்கிய உறவினர் இந்த நகையை திருடிச்சென்றதாக கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது கொள்ளை சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்று உள்ளது. தற்போது இந்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×