search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பூதலூரில் எலிமருந்தை தின்று தொழிலாளி தற்கொலை

    பூதலூரில் எலிமருந்தை தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சைவராஜ் (வயது60). கூலித்தொழிலாளி. கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த சைவராஜ் எலி மருந்தை தின்று மயங்கி கிடந்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சைவராஜ் இறந்தார். இதுகுறித்து சைவராஜின் மகன் மாசிலாமணி (23) கொடுத்த புகாரின் பேரில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×