என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூத்தாநல்லூரில் பலத்த மழை- விவசாயிகள் மகிழ்ச்சி
Byமாலை மலர்10 July 2021 10:17 AM GMT (Updated: 10 July 2021 10:17 AM GMT)
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையாக வெயில் சுட்டெரித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.
கூத்தாநல்லூர்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையாக வெயில் சுட்டெரித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை முதலே வெயில் அடிக்க தொடங்கினாலும் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
நேற்று மாலை 4.20 மணிக்கு திடீரென கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, வக்ராநல்லூர், மரக்கடை, கோரையாறு, திருராமேஸ்வரம், வேளுக்குடி, நாகங்குடி, வடபாதிமங்கலம், ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், ராமநாதபுரம், பழையனூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும் வயல்களிலும் மழைநீர் தேங்கியது. திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இந்த மழை சாகுபடிக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையாக வெயில் சுட்டெரித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை முதலே வெயில் அடிக்க தொடங்கினாலும் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
நேற்று மாலை 4.20 மணிக்கு திடீரென கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, வக்ராநல்லூர், மரக்கடை, கோரையாறு, திருராமேஸ்வரம், வேளுக்குடி, நாகங்குடி, வடபாதிமங்கலம், ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், ராமநாதபுரம், பழையனூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும் வயல்களிலும் மழைநீர் தேங்கியது. திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இந்த மழை சாகுபடிக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X