search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சங்காபுரம் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது

    சங்காபுரம் அருகே சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    சங்காபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், சவுக்கத்தலி தலைமையிலான போலீசார் குளத்தூர், சேஷசமுத்திரம், மோட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குளத்தூர் ஏரிக்கரையில் சாராயம் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை(வயது 40), சேஷசமுத்திரம் சுடுகாடு அருகே சாராயம் விற்ற கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி(35), வீட்டின் பின்புறம் சாராயம் விற்ற மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த தீர்த்தமலை(42) ஆகியோரை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 75 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×