என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலை அமைக்கும் பணி தொடக்கம்
Byமாலை மலர்9 July 2021 10:32 AM GMT (Updated: 9 July 2021 10:32 AM GMT)
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த ஆலை நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.
மன்னார்குடி:
கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரம் அடைந்தபோது தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. கொரோனா 2-வது அலையின் தாக்கம் சற்று தணிந்து உள்ள நிலையில் வருங்காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு பிரதம மந்திரி கேர் நிதியில் இருந்து ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதி மூலமாக மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டி.ஆர்.டி.ஓ.) நிறுவனம் பெங்களூருவில் இருந்து ஆக்சிஜன் ஆலைக்கு தேவையான எந்திரங்களை மன்னார்குடிக்கு அனுப்பியது.
இந்த எந்திரங்கள் நேற்றுமுன்தினம் மன்னார்குடி அரசு மருத்துவமனையை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து எந்திரத்தை பொருத்தி ஆலையை அமைக்கும் பணிகள் நேற்று தொடங்கின.
இந்த ஆலை நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்றும், இங்கிருந்து ஒரே நேரத்தில் 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வினியோகிக்க முடியும் என்றும் ஆலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள என்ஜினீயர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரம் அடைந்தபோது தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. கொரோனா 2-வது அலையின் தாக்கம் சற்று தணிந்து உள்ள நிலையில் வருங்காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு பிரதம மந்திரி கேர் நிதியில் இருந்து ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதி மூலமாக மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டி.ஆர்.டி.ஓ.) நிறுவனம் பெங்களூருவில் இருந்து ஆக்சிஜன் ஆலைக்கு தேவையான எந்திரங்களை மன்னார்குடிக்கு அனுப்பியது.
இந்த எந்திரங்கள் நேற்றுமுன்தினம் மன்னார்குடி அரசு மருத்துவமனையை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து எந்திரத்தை பொருத்தி ஆலையை அமைக்கும் பணிகள் நேற்று தொடங்கின.
இந்த ஆலை நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்றும், இங்கிருந்து ஒரே நேரத்தில் 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வினியோகிக்க முடியும் என்றும் ஆலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள என்ஜினீயர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X