என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாளை வீட்டில் 16 கிலோ பறிமுதல்- கஞ்சா பதுக்கிய மேலும் 2 பேர் கைது
Byமாலை மலர்9 July 2021 10:13 AM GMT (Updated: 9 July 2021 10:13 AM GMT)
பாளை பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கியது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
நெல்லை:
பாளை சாந்திநகர் மணிக்கூண்டு பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த 16 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அங்கிருந்த களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 22) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மணிக்கூண்டு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அதில் பலருக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் பாளை பெரியபாளையத்தை சேர்ந்த ராமன் (22) மற்றும் வண்ணார்பேட்டையை சேர்ந்த சங்கரபாண்டியன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X