search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாளை வீட்டில் 16 கிலோ பறிமுதல்- கஞ்சா பதுக்கிய மேலும் 2 பேர் கைது

    பாளை பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கியது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
    நெல்லை:

    பாளை சாந்திநகர் மணிக்கூண்டு பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த 16 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    தொடர்ந்து அங்கிருந்த களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 22) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மணிக்கூண்டு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அதில் பலருக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

    அதில் பாளை பெரியபாளையத்தை சேர்ந்த ராமன் (22) மற்றும் வண்ணார்பேட்டையை சேர்ந்த சங்கரபாண்டியன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.
    Next Story
    ×