search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

    மாட்டு வண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றி வந்து நூதன ஆர்ப்பாட்டம்

    தொ.மு.ச. பேரவை இணைப்பு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பூர்:

    பெட்ரோல், டீசல்,சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து தொ.மு.ச. பேரவை சார்பில் திருப்பூர்  ரெயில் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்க்கும் விதமாக மாட்டுவண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றிக்கொண்டு வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாவட்ட தொ.மு.ச. கவுன்சில் துணை தலைவர் ஆர்.ரெங்கசாமி, மின்சார வாரிய தொ.மு.ச. செயலாளர் ஈ.பி. அ. சரவணன், பொருளாளர் ஆனந்த், ஜின்னிங் தொ.மு.ச. ராமசந்திரன், மகேந்திரன், ஆட்டோ தொ.மு.ச. துரைரவிசந்திரன், முருகன்,  பனியன்  சங்க  தொ.மு.ச .பீட்டர், பூபதி, மயில்சாமி, வேலுச்சாமி, ரத்தினசாமி, ராஜ்மோகன்,  குணசேகரன், கணேசன் ,மற்றும் தொ.மு.ச.பேரவை இணைப்பு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும், மின்சார வாரிய ஊழியர்களும், ஒப்பந்த தொழிலாளர்களும்,  நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×