search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செயின் பறிப்பு
    X
    செயின் பறிப்பு

    சிங்காநல்லூர் அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு

    சிங்காநல்லூர் அருகே மூதாட்டியிடம் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்காநல்லூர்:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி ருக்குமணி (வயது 72). சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு பூ பறித்துக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் ருக்குமணி கழுத்தில் அணிந்து இருந்த 1½ பவுன் தங்க செயினை கண்இமைக்கும் நேரத்தில் பறித்து, மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு விட்டு தப்பிச் சென்றார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×