search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    போடி அருகே மூக்கில் ரத்தம் வழிந்த கல்லூரி மாணவர் பலி

    போடி அருகே மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி சீனிவாசாநகரை சேர்ந்த திருப்பதிவாசன் மகன் விஷால்(19). இவர் கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தும் நோய் பூரணகுணமாகவில்லை.

    சம்பவத்தன்று வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த விஷால் திடீரென மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி விழுந்தார். போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×