search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    கிட்டி குமாரமங்கலம் மரணம்- கே.எஸ்.அழகிரி இரங்கல்

    தலைநகர் டெல்லியில் சட்டம் ஒழுங்கு எந்தளவிற்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு கிட்டி குமாரமங்கலத்தின் கொலை சம்பவம் சான்றாக அமைந்துள்ளது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி வழக்கறிஞர் கிட்டி குமாரமங்கலம், அவரது வீட்டில் கொள்ளையடிக்க வந்தவர்களால் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தலைநகர் டெல்லியில் சட்டம் ஒழுங்கு எந்தளவிற்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்த கொலை சம்பவம் சான்றாக அமைந்துள்ளது.

    கிட்டி குமாரமங்கலத்தை இழந்து வாடும் அவரது மகனும், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவருமான மோகன் குமாரமங்கலத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Next Story
    ×