என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சிற்றம்பலம் கடைவீதியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்6 July 2021 10:31 AM GMT (Updated: 6 July 2021 10:31 AM GMT)
திருச்சிற்றம்பலம் கடைவீதியில் வணிக நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருச்சிற்றம்பலம்:
கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு தஞ்சை மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. அதனை செயல்படுத்தும் பொருட்டு, திருச்சிற்றம்பலம் கடைவீதியில் நேற்று வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் வணிக நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் திருச்சிற்றம்பலம் சரக வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் திருச்சிற்றம்பலம் போலீசார் ஈடுபட்டனர்.
இதேபோல் பூக்கொல்லை கடைவீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்றவர்களை பேராவூரணி தாசில்தார் ஜெயலெட்சுமி, மண்டல துணை தாசில்தார் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் முக கவசம் அணியாமல் பயணம் செய்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X