search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவையாறில் கஞ்சா விற்றவர் கைது

    திருவையாறில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவையாறு:

    திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் மற்றும் போலீசாருக்கு திருவையாறு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் வந்தது. இதையடுத்து திருவையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவையாறு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த கணேசமூர்த்தி (வயது25) என்பதும், வீட்டில் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசமூர்த்தியை கைது செய்து அவரிடம் இருந்த ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×