என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவையில் ஐ.டி. ஊழியர் தற்கொலை
சிங்காநல்லூர்:
கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கார்த்திக் என்கிற ஜெகநாதன் (வயது 28).
இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கார்த்திக்கின் தாய் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சகோதரி திருமணமாகி சென்று விட்டார். இதனால் இவர் தனியாக வசித்து வந்தார். தனிமை காரணமாக கடந்த சில நாட்களாக கார்த்திக் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோவை எஸ்.எஸ் குளம் பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (33). இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன் -மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி முனிரத்தினத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதனால் இதனால் முனிரத்தினம் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தியடைந்த முனிரத்தினம் வீட்டில் இருந்த சாணி பவுடரை குடித்து மயங்கி விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பொள்ளாச்சி குமரன் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (37). இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக நாகராஜின் மனைவி கடந்த 5 வருடங்கள் முன்பு அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் மன வேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்