search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவையில் ஐ.டி. ஊழியர் தற்கொலை

    கோவையில் தனிமை காரணமாக விரக்தியில் இருந்த ஐ.டி.ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்காநல்லூர்:

    கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கார்த்திக் என்கிற ஜெகநாதன் (வயது 28).

    இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கார்த்திக்கின் தாய் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சகோதரி திருமணமாகி சென்று விட்டார். இதனால் இவர் தனியாக வசித்து வந்தார். தனிமை காரணமாக கடந்த சில நாட்களாக கார்த்திக் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோவை எஸ்.எஸ் குளம் பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (33). இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன் -மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி முனிரத்தினத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதனால் இதனால் முனிரத்தினம் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தியடைந்த முனிரத்தினம் வீட்டில் இருந்த சாணி பவுடரை குடித்து மயங்கி விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    பொள்ளாச்சி குமரன் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (37). இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக நாகராஜின் மனைவி கடந்த 5 வருடங்கள் முன்பு அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் மன வேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    Next Story
    ×