என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி.என்.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வு நாளை தொடக்கம்
Byமாலை மலர்6 July 2021 3:08 AM GMT (Updated: 6 July 2021 3:08 AM GMT)
2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை மொழி தேர்வுகளுக்கான வாய்மொழி தேர்வு (நேர்முகத் தேர்வு) கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதம் ஆனது. இந்தநிலையில் தற்போது இந்த தேர்வு நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2020-ம் ஆண்டுக்கான துறைத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி முதல் பிப்ரவரி 21-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளில் 2-ம் நிலை எழுத்து தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை மொழி தேர்வுகளுக்கான வாய்மொழி தேர்வு (நேர்முகத் தேர்வு) கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதம் ஆனது. இந்தநிலையில் தற்போது இந்த தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு நடைபெறும் மையங்கள் மற்றும் தேதி விவரம் வருமாறு:-
17-ந்தேதி- (திருவள்ளூர், காஞ்சிபுரம்) - திருவள்ளூர் மையம்
26 மற்றும் 27-ந்தேதி- (சென்னை, டெல்லி) - சென்னை
இதுகுறித்து நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு குறுந்தகவல், மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான குறிப்பாணை தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X