என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் கடைகள் திறப்பு- பட்டாசு வெடித்து மதுப்பிரியர்கள் கொண்டாட்டம்
Byமாலை மலர்6 July 2021 1:51 AM GMT (Updated: 6 July 2021 1:51 AM GMT)
கோவையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பட்டாசு வெடித்து மதுப்பிரியர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
கோவை:
தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. அப்போது கடை ஊழியர்கள் தேங்காய், பழம் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.
இதைத்தொடர்ந்து மதுப்பிரியர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இதையடுத்து அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களுக்கு பிடித்த மதுவகைகளை வாங்கிச்சென்றனர். அப்போது அவர்கள் முககவசம் அணிந்து இருந்ததுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து காத்து நின்றனர்.
மதுப்பிரியர்களின் கைகளுக்கு மது பாட்டில்கள் கிடைத்ததும் அவர்கள் ஆரவாரம் செய்தனர். ஒருசிலர் தங்களிடமிருந்த செல்போனில் மது பாட்டில்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். ஆனால் நேற்று டாஸ்மாக் கடைகளில் வழக்கத்திற்கு மாறாக எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை.
இதேபோல் மயிலாடுதுறையில் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மதுப்பிரியர் ஒருவர் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து மது வாங்கிச்சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X