என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலா விவகாரம் : 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை
Byமாலை மலர்5 July 2021 1:48 PM GMT (Updated: 5 July 2021 1:48 PM GMT)
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தொண்டர்கள் அனைவரையும் சந்திக்க உள்ளதாக சசிகலா கூறி உள்ளார்.
சென்னை:
அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா தற்போது அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசி வருவது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கி உள்ளது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தொண்டர்கள் அனைவரையும் சந்திக்க உள்ளதாகவும் சசிகலா கூறி உள்ளார்.
சசிகலாவுடன் தொடர்பில் உள்ளவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்படுகின்றனர். அதேசமயம், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், சசிகலா ஆடியோ விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X