search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    ஜோலார்பேட்டை பகுதியில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை

    ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) மீனாட்சி தலைமையில் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்தனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திருப்பத்தூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் வழிகாட்டுதல்படி திருப்பத்தூர் கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரி பி.சுமதி தலைமையில் ஜோலார்பேட்டை வட்டார சுகாதார அளவில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) மீனாட்சி தலைமையில் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்தனர்.

    அப்போது ஜோலார்பேட்டை அரசு டாக்டர் பிரசாந்த், புகழேந்தி மற்றும் சுகாதார ஆய்வாளர் கோபி உள்பட நகராட்சி, ஊராட்சி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×