என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுக ஐ.டி. பிரிவினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசு -எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Byமாலை மலர்4 July 2021 11:22 AM GMT (Updated: 4 July 2021 11:22 AM GMT)
அதிமுகவுக்கு எதிராக மேற்கொள்ளும் அடக்குமுறையை திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு குறித்தும், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் சமூக வலைதளங்களுக்கே உரிய கருத்து சுதந்திரத்தின்படி நியாயமான முறையில் பதிவிட்ட கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது, அரசை தரக்குறைவாக விமர்சிப்பதாக கூறி வழக்கு பதிந்துள்ளனர்.
2, 3 ஆண்டுகளக்கு முன்பு திமுகவை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதியப்பட்ட கருத்துக்களுக்காகவும் இப்போது வழக்கு போடப்படுகிறது. நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொள்வதை விடுத்து, பொய் வழக்கு தொடுப்பதில் திமுக நாட்டம் செலுத்துகிறது.
திமுகவினர் தங்களுக்கு உள்ள அத்தனை உரிமைகளும் மற்றவர்களுக்கு உள்ளது என்பதை மறந்துவிட்டு, தற்போது ஆட்சி அதிகாரம் கைக்கு வந்துவிட்டது என்று, காவல்துறை மூலம் அதிமுகவுக்கு எதிராக மேற்கொள்ளும் அடக்குமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். திமுக அரசின் இந்த அடக்குமுறையையும், பொய் வழக்குகளையும் சட்டரீதியாக சந்திக்கும் வல்லமை அதிமுகவுக்கு உண்டு.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... இந்திய அரசை ஒன்றிய அரசு என்று சிறுமைப்படுத்துவது ஏற்கக்கூடியது அல்ல- ஓ.பன்னீர்செல்வம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X