search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களை சந்தித்து பேசிய மு.க.ஸ்டாலின்
    X
    மக்களை சந்தித்து பேசிய மு.க.ஸ்டாலின்

    கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட மு.க.ஸ்டாலின்

    சாலையில் மிக சாதாரணமாக சைக்கிள் ஓட்டிச் சென்ற மு.க.ஸ்டாலின், தனது பயணத்தின் இடையே பொதுமக்களை சந்தித்து பேசினார்.
    சென்னை:

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவாக சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது முதல்வர் ஆன பிறகும், மு.க ஸ்டாலின் பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் தனது சைக்கிள் பயிற்சியை விடாமல் செய்து வருகிறார். 

    மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்த இளைஞர்கள்

    அந்த வகையில் ஞாயிற்றுகிழமையான இன்று கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டார். வழிநெடுக போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான இந்த சைக்கிள் பயணத்தில் அவரது நண்பர்கள் உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர். 

    மூதாட்டி ஒருவரை சந்தித்து பேசிய மு.க.ஸ்டாலின்

    சாலையில் மிக சாதாரணமாக சைக்கிள் ஓட்டிச் சென்ற 
    மு.க.ஸ்டாலின்
    , தனது பயணத்தின் இடையே பொதுமக்களை சந்தித்து பேசினார். இளைஞர்கள் சிலர் மு.க. ஸ்டாலின் அருகே சென்று அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    ஓட்டலில் ஓய்வெடுக்கும் மு.க.ஸ்டாலின்

    மாமல்லபுரத்தில் ஒரு ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 
    Next Story
    ×