என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓ.டி.பி., எண் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி
Byமாலை மலர்4 July 2021 7:39 AM GMT (Updated: 4 July 2021 7:39 AM GMT)
பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
அவிநாசி:
அவிநாசி புனித தோமையார் துவக்கப்பள்ளியில் ஓட்டுச்சாவடி அடிப்படையில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.போலீசார் சமூக இடைவெளியுடன் நிற்க வைத்தனர்.பொதுமக்களின் ‘ஆதார்’ எண் பதிவு செய்யப்பட்டு, அவர்களின் மொபைல் எண்ணுக்கு ‘ஓ.டி.பி.,’ எண் அனுப்பப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-
பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. பலரும் இரண்டாவது ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். பலருக்கு தாங்கள் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட தடுப்பூசியின் பெயரை சொல்ல தெரியவில்லை.
இந்த குழப்பத்தை தவிர்க்கதான் ‘ஓ.டி.பி.,’ அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன் மூலம் மக்களின் மொபைல் போனுக்கு தாங்கள் செலுத்திக்கொண்ட தடுப்பூசியின் பெயர், செலுத்திக் கொண்ட தேதி உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்படும்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் மக்கள் ஆன்ட்ராய்டு அல்லது ஸ்மார்ட்போன் எடுத்து வர வேண்டும்.ஒரு மொபைல் எண்ணை அடிப்படையாக வைத்து நான்கு பேருக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X