search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்
    X
    ஒகேனக்கல்

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக சரிவு

    கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2,230 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவரியாற்றில் நீர்வரத்து வினாடிக்கு, 2,000 கன அடியாக குறைந்தது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால், அணைகளின் பாதுகாப்பு கருதி, காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது மழையின்றி, தங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து நேற்று முன் தினம், கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2,230 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக இருந்தது. நேற்று மாலை 2,000 கன அடியாக தண்ணீர் சரிந்தது.

    இன்று காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து இருந்து வருகிறது.

    இதனால் ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் குறைந்தளவே கொட்டுகிறது.

    Next Story
    ×