search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வாலிபரிடம் செல்போன்-மதுபாட்டில்களை பறித்து சென்ற மர்மநபர்

    கோகுல் பிரசாத் மதுவாங்கி கொண்டு நண்பருடன் அங்கிருந்து புறப்பட்டார்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் கோவில்வழி கிராமத்தை சேர்ந்தவர் கோகுல் பிரசாத் (வயது 20). இவர் தனது நண்பர் தினேஷ்குமாருடன் மோட்டார் சைக்கிளில் பழனி அருகே சாமளாபுரத்தில் உள்ள டாஸ்மாக்கடைக்கு சென்றார். அங்கு 2 பேரும் மது வாங்க நின்றனர். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கோகுல் பிரசாத்தை முந்திக்கொண்டு மது வாங்க சென்றார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கோகுல் பிரசாத் மதுவாங்கி கொண்டு நண்பருடன் அங்கிருந்து புறப்பட்டார். 

    அவருக்கு பின்னால் தகராறு செய்த வாலிபரும் மோட்டார் சைக்கிளில் வந்தார். தொடர்ந்து அந்த வாலிபர் கோகுல் பிரசாத்தை மோதுவது போல மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுள்ளார்.  

    மேலும் கோகுல்பிரசாத்தின் மோட்டார் சைக்கிளில் இருந்த செல்போன் மற்றும் மதுபாட்டிலை பறித்துக்கொண்டு வேகமாக சென்று விட்டார். இதுகுறித்து கோகுல்பிரசாத் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணை நடத்தி வாலிபரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×