search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்ட காட்சி.
    X
    கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்ட காட்சி.

    வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்-கலெக்டர் ஆய்வு

    குடிநீர் வழங்கும் திட்டத்தை கலெக்டர் வினீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் மெட்ராத்தி ஊராட்சி தாசர்பட்டியில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் ரூ.4 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் 56 வீடுகளுக்கு தனித்தனியாக குடிநீர் வழங்கும் திட்டத்தை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

    மேலும் ரூ.3 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு, குடிநீர்த்திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளன.  

    அண்ணாநகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் ரூ.9 லட்சத்து 70 ஆயிரத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, பணத்தம்பட்டியில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தில் கட்டப்படும் பயனாளியின் வீடு என மொத்தம் ரூ.20 லட்சத்து 47 ஆயிரத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

    முன்னதாக மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
    Next Story
    ×