என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாதுளை பெட்டிக்குள் மறைத்து மது கடத்திய 4 பேர் கைது
Byமாலை மலர்3 July 2021 6:13 AM GMT (Updated: 3 July 2021 6:13 AM GMT)
சரக்கு வாகனத்தில் மதுகடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர்:
கொரோனா தடுப்பு காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட வில்லை. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து சிலர் கார் உள்ளிட்ட வாகனங்களில் மதுபாட்டில்களை திருப்பூருக்கு கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
அதனை தடுக்கும் வகையில் போலீசார் மாவட்ட எல்லையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் பல்லகவுண்டம் பாளையத்தில் ஊத்துக்குளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் வாகனத்தில் இருந்த மாதுளை பழ பெட்டிகளுக்குள் மறைத்து மதுபாட்டில்களை கடத்தி திருப்பூருக்கு கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரியை சேர்ந்த மாரியப்பன் (வயது 29), சசிக்குமார், தர்மபுரியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் பல்லகவுண்டம் பாளையத்தை சேர்ந்த அருள்ஜோதி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 207 மதுபாட்டில் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X