என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பனியன் நிறுவனத்தில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
Byமாலை மலர்2 July 2021 8:30 AM GMT (Updated: 2 July 2021 8:30 AM GMT)
பிரேம்குமாருக்கு திருமணமாகாத நிலையில் அவரது பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிரோஷாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி.என்.பாலன் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 38). திருமணமாகவில்லை. இவர் தனது தாயார்அன்னலட்சுமியுடன் வசித்து வந்தார். மேலும் பிரேம்குமார் தான் குடியிருக்கும் வீட்டில் சிறிய பனியன் நிறுவனம் நடத்தி வந்தார்.
அவரது பனியன் நிறுவனத்தில் அதே பகுதி விவேகானந்தா வீதியை சேர்ந்த கார்த்திகை செல்வன் என்பவரின் மனைவி நிரோஷா(38) தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக 2 மாதமாக செயல்படாமல் இருந்த பிரேம்குமார் பனியன் நிறுவனம் தற்போது ஊரடங்கு தளர்வையடுத்து செயல்பட தொடங்கியது.
இந்தநிலையில் நேற்று காலை பிரேம்குமாரின் தாயார் வெளியே சென்று விட்டார். பிரேம்குமார் மட்டும் வீட்டில் இருந்தார். இரவு அன்னலட்சுமி வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கேட் உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. பிரேம்குமாரை அழைத்த போது உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த போது உள்ளே பிரேம்குமாரும், நிரோஷாவும் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தனர். அவர்களின் அருகில் விஷப்பாட்டில் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 2 பேரும் எதற்காக தற்கொலை செய்தனர் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேம்குமாருக்கு திருமணமாகாத நிலையில் அவரது பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிரோஷாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது. இந்த விவகாரம் வெளியே தெரிந்ததால் தற்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிரோஷா மற்றும் அவரது கணவர் கார்த்திகை செல்வனுக்கு சொந்த ஊர் தேனி மாவட்டம் வேப்பம்பட்டி. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் வேலைக்காக திருப்பூர் வந்துள்ளனர். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நிரோஷா, பனியன் நிறுவன உரிமை யாளருடன் தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X