search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பருத்தி
    X
    பருத்தி

    திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

    திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலத்தில் 2,360 குவிண்டால் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது. இந்த ஆண்டு பருத்திக்கு உரிய விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை ஏலத்துக்கு விவசாயிகள் வைத்திருந்தனர்.

    விழுப்புரம், பண்ருட்டி, செம்பனார்கோவில், தேனி, கும்பகோணம் உள்ளிட்ட வெளிமாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர்.

    இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில் கண்காணிப்பாளர் செந்தில் முருகன் மற்றும் மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர். இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 470 விலையும், குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 890 விலையும் கேட்கப்பட்டிருந்தது. சராசரியாக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 680-க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் 2,602 விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் 2,360 குவிண்டால் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது. இந்த ஆண்டு பருத்திக்கு உரிய விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    Next Story
    ×