என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமங்கலம் அருகே விபத்து- பெண் வக்கீல் பலி
திருமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டம், மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் அதே பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மீனாட்சி (வயது 48). இவர் புதுக்கோட்டையில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் ரவிச்சந்திரன் தனது கடையில் விற்பனைக்காக மொத்தமாக பட்டாசுகளை வாங்க திட்டமிட்டார்.
இதற்காக நேற்று ரவிச்சந்திரன், அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டையில் இருந்து சிவகாசிக்கு புறப்பட்டனர்.
நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் மதுரை திருநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கினர். பின்னர் இன்று காலை மீண்டும் இருவரும் மோட்டார் சைக்கிளில் சிவகாசி புறப்பட்டனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை 4 வழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென நாய் ஒன்று குறுக்கே சென்றது. இதில் மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மீனாட்சி தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லேசான காயத்துடன் கணவர் ரவிச்சந்திரன் உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்