என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சென்னையில் தினமும் 20 ஆயிரம் தடுப்பூசி போட இலக்கு - மாநகராட்சி அதிகாரி தகவல்
சென்னை:
சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன்.
கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டிவந்த மக்கள் கொரோனா 2-வது அலைக்கு பிறகு தடுப்பூசி போட முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால் கடந்த 2 மாதமாக தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழ்நாட்டில் சென்னையில்தான் அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 25 லட்சத்து 36 ஆயிரத்து 383 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இனி வரும் நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில் ஊசி போடுவது நிறுத்தப்பட்டாலும் 2 நாட்களில் அந்த பகுதிகளுக்கு முழு அளவில் தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது.
சென்னை நகரில் வசிக்கும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டுள்ளோம் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்