என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரம்
Byமாலை மலர்30 Jun 2021 7:11 AM GMT (Updated: 30 Jun 2021 7:11 AM GMT)
அரசு அறிவுறுத்தியபடி உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் பின்பற்ற வேண்டும்.
திருப்பூர்:
கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை துவக்க வேண்டுமென பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியது. பெற்றோர்களும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறுகையில்:
‘சமூக இடைவெளி கருதி முதல் நாளில் மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள நகர்ப்புற பள்ளிகளில் தேவைப்படும் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் (டி.சி.,) வழங்கப்பட்டது.மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாணவர்கள் விருப்பப்படி அவர்களின் விரும்பிய வகுப்புகளில் சேர்ந்தனர் என்றனர்.
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறியதாவது:
அரசு அறிவுறுத்தியபடி உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் பின்பற்ற வேண்டும். மாணவர்களுக்கு வழங்குவதற்காக புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.தற்போது கிராமப்பகுதியில் உள்ள துவக்கநிலை மாணவர்களுக்கு மட்டும் பாடபுத்தகங்கள் வழங்கபடுகின்றன. கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு பல கட்டமாக பிரித்து பாட புத்தகங்கள் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X