search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    பழனி கோவில் நிலத்தை ஒப்படையுங்கள்... குத்தகைதாரர்களின் வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

    கோவில் சொத்துகளுக்கும், சிலைகளுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    பழனி பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு இங்கிலாந்து மகாராணியால் தானமாக வழங்கப்பட்ட 60 ஏக்கர் நிலம், தாராபுரம் தாலுகா பெரிய குமாரபாளையத்தில் உள்ளது. இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்த ஸ்ரீரங்க கவுண்டர், ராமசாமி கவுண்டர் இருவரும் நிலத்திற்கு உரிமை கோரினர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஈரோடு நீதிமன்றம், ஆங்கில அரசால் வழங்கப்பட்ட நிலம் கோவில் முலவருக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றமும் இந்த திர்ப்பை உறுதி செய்தன.

    அதன்பின்னர், நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைக்கும்படி கோவில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கிலும் குத்தகைதாரர்களுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 
    சென்னை உயர் நீதிமன்றத்தில்
     குத்தகைதாரர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர்.

    பழனி கோவில்

    இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்படி குத்தகைதாரர்களுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அவர்களின் வழக்கை தள்ளுபடி செய்தது.

    ‘பொதுவாக குழந்தைகளுக்கு நீதிமன்றமே பாதுகாப்பு என்ற சட்டம் உள்ளது. பழனி தண்டாயுதபாணியை பக்தர்கள் குழந்தையாக பார்ப்பதால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள். அதன் அடிப்படையில் கோவில் கர்ப்பகிரகத்தில் உள்ள சாமி, சிலைகள், கோவில் சொத்துக்களுக்கு நீதிமன்றமே பாதுகாப்பு’ என்று நீதிபதி தெரிவித்தார்.
    Next Story
    ×