search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 37 பேர் மீது வழக்கு

    அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 37 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    நொய்யல்:

    தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களை பொதுமக்களின் வழிபாட்டிற்கு திறக்கக்கோரி கோவில்கள் முன்பு நேற்று முன்தினம் கரூர் மேற்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நஞ்சை புகளூர், தளவாபாளையம், வேலாயுதம்பாளையம் கடைவீதி, புகழிமலை, நாணப்பரப்பு ஆகிய இடங்களில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், போலீஸ் அனுமதியின்றி கோவில்கள் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இந்து முன்னணியை சேர்ந்த 37 பேர் மீது வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
    Next Story
    ×