என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில் சேவை 419 ஆக அதிகரிப்பு
Byமாலை மலர்26 Jun 2021 7:43 PM GMT (Updated: 26 Jun 2021 7:43 PM GMT)
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டு, பொதுமக்களும் பயணிக்க தெற்கு ரெயில்வே அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
கொரோனா ஊரடங்கால் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் குறைந்த அளவில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் 98 மின்சார ரெயில் சேவைகளே இயக்கப்பட்டன. இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் சென்னையில் மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டு, பொதுமக்களும் பயணிக்க தெற்கு ரெயில்வே அனுமதி அளித்தது.
அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை மின்சார ரெயில் சேவையும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மூர்மார்க்கெட்-அரக்கோணம் இடையே 149 மின்சார ரெயில் சேவையும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே 66 மின்சார ரெயில் சேவையும், கடற்கரை-செங்கல்பட்டு இடையே 138 மின்சார ரெயில் சேவையும், கடற்கரை-வேளச்சேரி இடையே 50 சேவைகளும், ஆவடி, பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே 16 சேவைகளும் என 419 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் குறைந்த அளவில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் 98 மின்சார ரெயில் சேவைகளே இயக்கப்பட்டன. இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் சென்னையில் மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டு, பொதுமக்களும் பயணிக்க தெற்கு ரெயில்வே அனுமதி அளித்தது.
அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை மின்சார ரெயில் சேவையும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மூர்மார்க்கெட்-அரக்கோணம் இடையே 149 மின்சார ரெயில் சேவையும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே 66 மின்சார ரெயில் சேவையும், கடற்கரை-செங்கல்பட்டு இடையே 138 மின்சார ரெயில் சேவையும், கடற்கரை-வேளச்சேரி இடையே 50 சேவைகளும், ஆவடி, பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே 16 சேவைகளும் என 419 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X