என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு அருகே தலைமை ஆசிரியை தற்கொலை முயற்சி
Byமாலை மலர்26 Jun 2021 10:18 AM GMT (Updated: 26 Jun 2021 10:18 AM GMT)
களக்காடு அருகே தலைமை ஆசிரியை தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
சம்பவத்தன்று லில்லி வீட்டில் இருந்த கற்பூரத்தை கரைத்து குடித்து மயங்கி விழுந்தார். கணவர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக லில்லி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது லில்லி அதே பகுதியை சேர்ந்த 2 பெண்களிடம் தலா ரூ.1.5 லட்சம் வீதம் கடன் வாங்கி இருந்ததும், அதில் குறிப்பிட்ட தொகையை திருப்பி கொடுத்த பிறகும் அவர்கள் பணம் தரவில்லை என கூறி லில்லியிடம் தகராறும் செய்துள்ளனர்.
சம்பவத்தன்று லில்லிக்கு பணம் கொடுத்தவர்களில் ஒருவரான பார்வதி என்ற பெண் அவரை அவதூறாக பேசி மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனால் மனம் உடைந்த லில்லி தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இதையடுத்து பார்வதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு அருகே உள்ள பத்மநேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி லில்லி (40). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக லில்லி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது லில்லி அதே பகுதியை சேர்ந்த 2 பெண்களிடம் தலா ரூ.1.5 லட்சம் வீதம் கடன் வாங்கி இருந்ததும், அதில் குறிப்பிட்ட தொகையை திருப்பி கொடுத்த பிறகும் அவர்கள் பணம் தரவில்லை என கூறி லில்லியிடம் தகராறும் செய்துள்ளனர்.
சம்பவத்தன்று லில்லிக்கு பணம் கொடுத்தவர்களில் ஒருவரான பார்வதி என்ற பெண் அவரை அவதூறாக பேசி மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனால் மனம் உடைந்த லில்லி தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இதையடுத்து பார்வதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X