search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்
    X
    பெட்ரோல்

    நெல்லையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்வு

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பெட்ரோலின் விலை ரூ.100-ஐ நெருங்குகிறது.
    நெல்லை: 

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதையடுத்து தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே கடலூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி உள்பட 13 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி விட்டது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பெட்ரோலின் விலை ரூ.100-ஐ நெருங்குகிறது. நெல்லையில் நேற்று ரூ.99.19-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 31 காசுகள் உயர்ந்து ரூ.99.50-க்கு விற்பனையானது.

    டீசல் நேற்று ஒரு லிட்டர் ரூ.93.25-க்கு விற்கப்பட்டது. இன்று 34 காசுகள் உயர்ந்து 93.59-க்கு விற்பனையாகிறது. தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.69 பைசாவாகவும், டீசல் ஒரு லிட்டர் 93.57 பைசாவாகவும் உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டு விடும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×