என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்காதலை கைவிடாததால் இளம்பெண்ணை கொன்ற கணவர்-தந்தை கைது
Byமாலை மலர்25 Jun 2021 10:36 AM GMT (Updated: 25 Jun 2021 10:37 AM GMT)
நெல்லை அருகே கள்ளக்காதலை கைவிடாத இளம்பெண்ணை கொன்ற சம்பவம் குறித்து கணவர் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள அத்திமேடு கிராமத்தை சேர்ந்தவர் சேர்மத்துரை. இவருடைய மனைவி இசக்கியம்மாள் என்ற கவிதா(வயது 27). இவருக்கும், டவுன் கண்டியப்பேரியை சேர்ந்த ராமச்சந்திரன்(20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த சேர்மத்துரை கள்ளக்காதலை கைவிடுமாறு கண்டித்தும், அவர்கள் 2 பேரும் கேட்கவில்லை. கள்ளக்காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி பேட்டை ஸ்ரீராம் நகரில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதனை அறிந்த சேர்மத்துரை மற்றும் கவிதாவின் சகோதரர்கள் சுப்பிரமணியன், மாரிச்செல்வம் ஆகியோர் அங்கு சென்றனர். உடனே கவிதாவும், ராமச்சந்திரனும் தப்பி வயல்வெளிக்குள் ஓடினர்.
ஆனால் விடாமல் அவர்களை விரட்டிச்சென்ற 3 பேரும் சேர்ந்து கவிதா மற்றும் ராமச்சந்திரனை சரமாரி குத்திவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் கவிதா சிகிச்சை பலனின்றி இறந்தார். ராமச்சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேர்மத்துரை மற்றும் கவிதாவின் தந்தை இசக்கி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான சுப்பிரமணி மற்றும் மாரிச்செல்வம் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக சேர்மத்துரை, இசக்கி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் எங்களது கண்டிப்பையும் மீறி கள்ளக்காதலில் ஈடுபட்டார். கடந்த சில நாட்களுக்குமுன்பு ராமச்சந்திரனுடன் சேர்ந்து தனியாக வசித்து வந்தார். இதனை அவமானமாக கருதிய நாங்கள், 2 பேரையும் கத்தியால் குத்தினோம் என அவர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X