என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணம் நிச்சயிக்கப்பட்ட மகனுக்கு கொரோனா- தாய் தற்கொலை
Byமாலை மலர்25 Jun 2021 10:07 AM GMT (Updated: 25 Jun 2021 10:07 AM GMT)
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகனுக்கு திருமணம் நின்று விடுமோ என்ற அச்சத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள கடையனோடை யாதவர் தெருவை சேர்ந்தவர் லிங்கதுரை (வயது 63). இவருக்கு ஜெயலட்சுமி (வயது 52) என்ற மனைவியும் அசோக் என்ற மகனும் உள்ளனர். அசோக்கிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து லிங்கதுரை நாசரேத் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று ஜெயலட்சுமி சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகனுக்கு திருமணம் நின்று விடுமோ என்ற அச்சத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாசரேத் அருகே உள்ள கடையனோடை யாதவர் தெருவை சேர்ந்தவர் லிங்கதுரை (வயது 63). இவருக்கு ஜெயலட்சுமி (வயது 52) என்ற மனைவியும் அசோக் என்ற மகனும் உள்ளனர். அசோக்கிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து லிங்கதுரை நாசரேத் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று ஜெயலட்சுமி சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகனுக்கு திருமணம் நின்று விடுமோ என்ற அச்சத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X