search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூரில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு

    நேற்று புதியதாக 386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 538 பேர் சிகிச்சை முடிந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.இதன்படி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து நலம் பெற்று வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 77 ஆயிரத்து, 456 ஆகியுள்ளது.

    நேற்று புதியதாக 386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 2,247 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 3 பேர் பலியாகினர்.இதுவரை மொத்தம் 723 பேர் உயிரிழந்துள்ளனர். 

    மாவட்டத்தின் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 400க்கு கீழ் குறைந்து 386 ஆக பதிவானதால் சுகாதார துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
    Next Story
    ×