என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
Byமாலை மலர்25 Jun 2021 9:21 AM GMT (Updated: 25 Jun 2021 9:21 AM GMT)
உடனடியாக ஊதியம் மற்றும் கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் கொரோனா பணி ஊக்கத்தொகையும் வழங்கவில்லை. இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும் ஒப்பந்ததாரர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை கண்டித்து இன்று காலை துப்புரவு பணியாளர்கள் வேலையை புறக்கணித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக ஊதியம் மற்றும் கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதனை அடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X