search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிஷோர் கே சாமி
    X
    கிஷோர் கே சாமி

    சமூக வலைத்தளங்களில் அவதூறு- கிஷோர் கே.சாமி 3வது வழக்கில் கைதானார்

    நடிகை ரோகிணி உள்பட மேலும் 3 பேர் கிஷோர் கே.சாமி மீது புகார்கள் கொடுத்தனர்.
    சென்னை:

    பா.ஜ.க.வின் ஆதரவாளரான கிஷோர் கே.சாமி சமூகவலைதளங்களில் அவதூறான கருத்துகளை பதிவு செய்து பரபரப்பாக பேசப்பட்டவர். தி.மு.க. கட்சி மீதும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி இழிவான கருத்துக்களை பதிவு செய்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்தார்.

    இது தொடர்பாக சங்கர்நகர் போலீசார் கிஷோர் கே.சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பெண் பத்திரிகையாளர் பற்றி ஆபாச கருத்துக்களை வெளியிட்ட புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கிஷோர் கே.சாமியை 2-வது முறையாக கைது செய்தனர்.

    இந்த நிலையில் நடிகை ரோகிணி உள்பட மேலும் 3 பேர் கிஷோர் கே.சாமி மீது புகார்கள் கொடுத்தனர். தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கு மிரட்டல் விடுத்ததாக பதிவான வழக்கில் 3-வது முறையாக கிஷோர் கே.சாமி நேற்று கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×