என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்பு இல்லை
Byமாலை மலர்24 Jun 2021 2:36 AM GMT (Updated: 24 Jun 2021 2:36 AM GMT)
மதுரையில் நேற்று புதிதாக 120 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மதுரை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மதுரையில் நேற்று புதிதாக 120 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 684 ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல் நேற்று மேலும் 155 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். இதன் மூலம் நோயில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 957 ஆக உள்ளது. இதனிடையே நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று மதுரையில் நோய் தோற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,075 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து 652ஆக இருக்கிறது.
இவர்களில் பெரும்பாலானோர் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவர்களும் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X