search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ரூ.2000 நிவாரணம், மளிகை பொருட்கள் தொகுப்பை 2 நாட்களில் வழங்கி முடிக்க உத்தரவு

    கொரோனா நிவாரணமாக, 2 தவணைகளாக 2 ஆயிரம் ரூபாய் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே முதல் தவணை 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
    சென்னை:

    தமிழகத்தில் அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக, 2 தவணைகளாக தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே முதல் தவணை 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 2ஆம் தவணை 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 15ஆம் தேதி முதல் இவை வழங்கப்பட்டு வரும் நிலையில், நாளை மறுநாளுக்குள் விநியோகித்து முடிக்க வேண்டும் என மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு, உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×