என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கு உத்தரவை மீறிய 231 பேர் மீது வழக்குப்பதிவு
Byமாலை மலர்23 Jun 2021 11:46 AM GMT (Updated: 23 Jun 2021 11:46 AM GMT)
கரூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் தேவையின்றி வாகனங்களில் வலம் வருபவர்களை போலீசார் கண்காணித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் தேவையின்றி வாகனங்களில் வலம் வருபவர்களை போலீசார் கண்காணித்து அபராதம் விதித்து வருகின்றனர். அந்தவகையில் போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டதில், முககவசம் அணியாமல் வெளியே வந்த 183 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.32,400-ம், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத வகையில் 15 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக மொத்தம் ரூ.7,500 வசூலிக்கப்பட்டது. மேலும், ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது 28 வழக்குகள் பதியப்பட்டன. மது பாட்டில்களை பதுக்கியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X