search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நீடாமங்கலம் வட்டாரத்தில் கொரோனா தொற்று குறைந்தது

    மத்திய-மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தியது. நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
    நீடாமங்கலம்:

    நீடாமங்கலம் வட்டாரத்தில் கொரோனா முதல் மற்றும் 2-வது தொற்று காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து மத்திய-மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தியது. நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    இந்தநிலையில் நீடாமங்கலம் வட்டாரத்தில் 2 ஆண்கள் மட்டுமே கொரோனா தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார மருத்துவ அலுவலர் ராணிமுத்துலெட்சுமி தலைமையில் சுகாதார துறையினர் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேரையும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் பாதிக்கப்பட்ட வர்களின் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    Next Story
    ×