search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான வீரபிரபு.
    X
    கைதான வீரபிரபு.

    காரில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

    திருப்பூர் சாந்தி தியேட்டர் அருகே உள்ள தனியார் பாரில் விற்பனை செய்வதற்காக காரில் மதுபாட்டில்களை கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மீனாட்சிபுரம் பழனி சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.திடீரென அந்த கார் மற்றொரு கார் மீது மோதிவிட்டு சென்றது .

    அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் காரை துரத்தி பிடித்தனர். அப்போது காருக்குள் 3 பேர் இருந்தனர். அதில் 2 பேர் காரில் இருந்து இறங்கி தப்பியோடிவிட்டனர். 

    ஒருவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காரில் மது கடத்தி வந்தது தெரியவந்தது. 

    இளையான்குடியை சேர்ந்த வீரபிரபு (வயது 35), சைத்தான் (38), விஜயன் (42) ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளில் இருந்து 576 மதுபாட்டில்களை வாங்கி திருப்பூர் சாந்தி தியேட்டர் அருகே உள்ள தனியார் பாரில் விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. பிடிபட்ட வீரபிரபு மீது இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். தப்பியோடிய மற்ற 2பேரை தேடி வருகின்றனர். கார் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×