என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்23 Jun 2021 8:22 AM GMT (Updated: 23 Jun 2021 8:22 AM GMT)
திருப்பூர் சாந்தி தியேட்டர் அருகே உள்ள தனியார் பாரில் விற்பனை செய்வதற்காக காரில் மதுபாட்டில்களை கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மீனாட்சிபுரம் பழனி சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.திடீரென அந்த கார் மற்றொரு கார் மீது மோதிவிட்டு சென்றது .
அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் காரை துரத்தி பிடித்தனர். அப்போது காருக்குள் 3 பேர் இருந்தனர். அதில் 2 பேர் காரில் இருந்து இறங்கி தப்பியோடிவிட்டனர்.
ஒருவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காரில் மது கடத்தி வந்தது தெரியவந்தது.
இளையான்குடியை சேர்ந்த வீரபிரபு (வயது 35), சைத்தான் (38), விஜயன் (42) ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளில் இருந்து 576 மதுபாட்டில்களை வாங்கி திருப்பூர் சாந்தி தியேட்டர் அருகே உள்ள தனியார் பாரில் விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. பிடிபட்ட வீரபிரபு மீது இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். தப்பியோடிய மற்ற 2பேரை தேடி வருகின்றனர். கார் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X