என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை
Byமாலை மலர்23 Jun 2021 8:15 AM GMT (Updated: 23 Jun 2021 8:15 AM GMT)
சந்திரன் இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லை.
திருப்பூர்:
திருப்பூர் பி.என்.ரோடு பூலுவம்பட்டி அடுத்த ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மீனா (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனைப்பெண்ணின் பெற்றோர் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மறுநாள் சந்திரன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லை. அவர் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சந்திரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X