என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கத்தரிக்காய் விலை குறைவு-விவசாயிகள் கண்ணீர்
Byமாலை மலர்23 Jun 2021 7:00 AM GMT (Updated: 23 Jun 2021 7:00 AM GMT)
திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு ஒரு டன் பவானி ரக கத்தரிக்காய் வருகிறது.
திருப்பூர்:
கொரோனா ஊரடங்கில் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் காய்கறிகள் சந்தைக்கு அதிகளவில் குவிய துவங்கியுள்ளன.வழக்கமாக கத்தரிக்காயில் பவானி ரகம் கூடுதல் விலைக்கு விற்கப்படும். தற்போது திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு ஒரு டன் பவானி ரக கத்தரிக்காய் வருகிறது. ஆனால் ஓட்டல்கள் செயல்படாததால் வாங்கி செல்வோர் குறைவாக உள்ளனர்.
ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்ற கத்தரிக்காய் தற்போது ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு 2.5 டன் கத்தரிக்காய் வருகிறது. அவை ஒரு கிலோ ரூ.25க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:
விலையை எதிர்பார்த்து அதிகளவில் பயிரிட்டோம்.ஆனால் ஊரடங்கால் சந்தைக்கு கொண்டு வந்து சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்து பவானி கத்தரிக்காய் வந்து குவிவதால் விலை குறைந்துள்ளது என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X