என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்21 Jun 2021 5:40 PM GMT (Updated: 21 Jun 2021 5:40 PM GMT)
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 67 ஆனது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 561 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்தநிலையில் திண்டுக்கல்லை அடுத்த பஞ்சம்பட்டியை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் திருச்சி தனியார் மருத்துவமனையிலும், வேடசந்தூரை சேர்ந்த 65 வயது மூதாட்டி, நீல மலைக்கோட்டையை சேர்ந்த 65 வயது முதியவர் ஆகியோர் கொரோனா பாதிப்புடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதற்கிடையே அவர்கள் 3 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 564 ஆக உயர்ந்தது.இதற்கிடையே நேற்று 8 பெண்கள் உள்பட மேலும் 82 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 67 ஆனது. மேலும் 195 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 668 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 561 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்தநிலையில் திண்டுக்கல்லை அடுத்த பஞ்சம்பட்டியை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் திருச்சி தனியார் மருத்துவமனையிலும், வேடசந்தூரை சேர்ந்த 65 வயது மூதாட்டி, நீல மலைக்கோட்டையை சேர்ந்த 65 வயது முதியவர் ஆகியோர் கொரோனா பாதிப்புடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதற்கிடையே அவர்கள் 3 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 564 ஆக உயர்ந்தது.இதற்கிடையே நேற்று 8 பெண்கள் உள்பட மேலும் 82 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 67 ஆனது. மேலும் 195 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 668 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X