search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழப்பு

    மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 67 ஆனது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 561 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்தநிலையில் திண்டுக்கல்லை அடுத்த பஞ்சம்பட்டியை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் திருச்சி தனியார் மருத்துவமனையிலும், வேடசந்தூரை சேர்ந்த 65 வயது மூதாட்டி, நீல மலைக்கோட்டையை சேர்ந்த 65 வயது முதியவர் ஆகியோர் கொரோனா பாதிப்புடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதற்கிடையே அவர்கள் 3 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 564 ஆக உயர்ந்தது.இதற்கிடையே நேற்று 8 பெண்கள் உள்பட மேலும் 82 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 67 ஆனது. மேலும் 195 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 668 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
    Next Story
    ×